திருக்குறள்

628.

இன்பம் விழையான் இடும்பை இயல்பென்பான் துன்ப முறுதல் இலன்.

திருக்குறள் 628

இன்பம் விழையான் இடும்பை இயல்பென்பான் துன்ப முறுதல் இலன்.

பொருள்:

இன்பத்தைத் தேடி அலையாமல், துன்பம் வந்தாலும் அதை இயல்பாகக் கருதிப்கொள்பவன் அந்தத் துன்பத்தினால் துவண்டு போவதில்லை.

மு.வரததாசனார் உரை:

இன்பமானதை விரும்பாதவனாய்த் துன்பம் இயற்கையானது என்று தெளிந்திருப்பவன், துன்பம் வந்த போது துன்ப முறுவது இல்லை.

சாலமன் பாப்பையா உரை:

உடம்பிற்கு இன்பம் விரும்பாதவனாய், அதற்கு வரும் துன்பத்தை இயல்புதானே என்பவன், மனம் தளர்ந்து துன்பப்படமாட்டான்.